Sunday 23 February 2014

இயற்கை சீற்ற மேலாண்மை -எல்நினோ

எல்நினோ

This image of Earth shows the strong El Niño of 1997
எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் உடையதாகும். டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உருவாகும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். 

பெரு, ஈக்வடார் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும்.இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறதுஎல்நினோ எனப்படும் மோசமான காலநிலை மாற்றமானது நடப்பாண்டு மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் வறட்சி,உணவுப்பொருள் தட்டுபாடு போன்றவை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. 

கிழக்கு மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது. மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும். இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது. 

எல்நினோ உண்டாவதால் ஏற்படும் தாக்கம்:-

கிழக்கத்திய பசிபிக் பகுதிகளில் மழையை அதிகரிக்கிறது
மேற்கத்திய பசிபிக் பகுதிகளில் வறட்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.
கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் ஈக்வடார் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.
உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்சி பகுதிகளில் ஏற்படுகிறது.


பசிபிக் பெருங்கடலின் சாதாரணமான காலநிலை :-


சாதாரணமான காலநிலை :
எல்நினோவின் தோற்றமானது தென்பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியிலே தோன்றுகின்ற ஒரு நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடலின் சாதாரணமான காலநிலையினை அறிந்து கொள்வதன் மூலம் எல்நினோவின் உருவாக்கத்தினை அறிந்து கொள்ள இயலும்.சாதாரணமாக பசிபிக் பெருங்கடலின் மேற்கு கரை கடற்பகுதிகளில் தாழமுக்க நிலை காணப்படுவதால் அதிக மழைவீழ்ச்சியும், மாறாக கிழக்கு கடற்கரைப்  பகுதிகளில் உயரமுக்க நிலை காணப்படுவதால் இப்பிரதேசங்களில் குறைந்தளவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்றது.



எல்நினோ காலநிலை:-

எல்நினோ காலநிலை
எல்நினோ நிகழ்வின் காரணமாக மேற்கு பசிபிக் பெருங்கடலில் மேற்கிருந்து கிழக்காக கடலின் வெப்பநிலையானது அதிகரிக்குமாறு கடற்பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை நகர்கின்றது. இதனால் மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையானது அதிகரித்து அதிக வெப்பநிலையினை ஏற்படுத்துகின்றது. இந்நிகழ்வினால் சாதாரணமாக பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்ற தாழமுக்க, உயரமுக்க நிலைகள் இடம் மாறுகின்றன. பெரு கடற்கரையை ஒட்டிய மேற்கு பசிபிக் பகுதியில் சாதாரணமாக காணப்படக்கூடிய நிலைக்கு மாறாக தாழமுக்க நிலை உருவாகுவதுடன், கிழக்கு பசிபிக் பகுதியில் உயரமுக்க நிலையும் தோன்றுகின்றது.மேற்கு பசிபிக் பகுதிகளில் இத்தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதத்தின் அளவு குறைந்து, குறைவான மழைவீழ்ச்சியைக் கொண்ட வறண்ட நிலைமை ஏற்படுகின்றது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆபிரிக்கா முதலிய பகுதிகளுக்கு வறண்ட காலநிலையை ஏற்படுத்துகின்றது. அதேவேளை குறைந்த மழையைப் பெற வேண்டிய கிழக்கு பசிபிக் பகுதியானது மிதவெப்பத்துடனும், அதிக மழையையும் பெற்றுக்கொள்கின்றது.எல்நினோவானது 2- 7 வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும். அத்துடன் இது 12-18 மாதங்கள் வரை நீடிக்கும்.


Monday 3 February 2014

மூலிகைச்செடிகள் பாகம் 5

மூலிகைச்செடிகள் பாகம் 5

அம்மான் பச்சரிசி:-

மூலிகைச்செடி என்று கூறிவிட்டு இது என்ன பச்சரிசி புழுங்கலரிசி என பெயர் கூறுவது விந்தையாக உள்ளதா?இதன் பெயர் அம்மான் பச்சரிசி தான்.தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்பது ஆகும்.

வகைப்பாடு :-

திணை:    (இராச்சியம்) தாவரம்

வகுப்பு :-  Magnoliopsida

வரிசை:  Magnoliophyta

பேரினம்:  Euphorbia

இனம்:   E. hirta

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு.இச்செடிகள் சாதாரணமாக தரிசு நிலங்கள், சாலை ஓரப்பகுதிகள் மற்றும்  ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் காணப்படும்.களைச்செடி போல தோற்ற்ம் தரக்கூடியவை.கால அளவு கிடையாது ஆண்டு முழுவதும் பரவலாக காணப்படுபவை.உயரமாக வளரக்கூடிய செடி வகை.சுமார் 50 செ.மீ வரை வளரும்.இலைகள் அமைப்பு எதிரெதிராக அமைந்தவை.சொரசொரப்பாக காணப்படும்.சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் இலைகள் காணப்படும்.சிறு சிறு பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும்.இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு.


வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்

சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்

ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே

கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- என அகத்தியர் குணபாடத்தில் அம்மான் பச்சரிசி பற்றி கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பலன்கள்:-

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.

இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது தடவினால் கொப்புளங்களின் வீக்கங்கள் குணமாகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும்.அதனை மரு உள்ள இடத்தில் தடவியும் இலைகளினை நன்கு கசக்கி அதனையும் மருவின் மேல் தடவி வர மரு உதிர்ந்து விடும். 

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.