Saturday 22 March 2014

உலக தண்ணீர் தினம் -மார்ச் 22

நன்றி தினமணி 
நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது.அதன் பேரில் ஆண்டுதோறும் 1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான். 

உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு புதிய விதமான கடுமையான நோ‌ய்க‌ள்.

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம்.தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

Friday 21 March 2014

சிட்டுக்குருவி -ஓர் பார்வை


பறவை இனங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் கவரும் வகையில் கீச் கீச் எனக் கூக்குரலிடுவதுசிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல் வெளிகள் வீட்டு மனைகளாக்கப்பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் பறந்து திரியும் சின்னஞ்சிறியசிட்டுக்குருவிகளை பார்த்து மகிழ்ந்த காலம் போய்,தற்போது சிட்டுக்குருவி இனமே இல்லை எனுமளவுக்கு குறைந்துகாணப்படுகிறது. அவ்வாறு அவற்றின் இனம் அழிந்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து, பறவையியல் ஆராய்ச்சியாளர்களும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். சிட்டுக்குருவிகள் பறப்பதற்கும், கூடுகள் கட்டி வாழ்வதற்கும்முன்பிருந்த வசதிகள் ஏதும் தற்போதைய நகர வாழ்க்கையில்அவற்றுக்கு கிடைக்காததும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்குகாரணம் என்றும், நவீன செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களாலும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயல்களில் போடப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிமருந்துகளாலும் அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்,அதன் மூலம் சிறு குஞ்சுகளுக்கு அத்தியாவசிய உணவானபூச்சி, புழுக்கள் கிடைக்காமல் போயிருப்பதாகவும் அந்த ஆய்வுகள்தெரிவிக்கின்றன

செல்போன் கோபுரங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனமான செல்போன்கள் பெருகி விட்ட நிலையில் நகரங்கள் மட்டும் இல்லாது கிராமப்புறங்களிலும் செல்போன் கோபுரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் இனம் தொடர்ந்து அழியும் நிலை உருவாகி உள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 20-ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இம்முயற்சியை தொடங்கி உள்ளன. இதன் மூலம் சிட்டுக் குருவிகள் மற்றும் அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.அது முதல் தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

 ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.

தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.

சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.

சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.

சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.

உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள சந்தை ஒன்றில்உள்ள வியாபாரிகளுக்கு, சி்ட்டுக்குருவிகளை வளர்க்க தேவையானகூண்டுகளை தனியார் அமைப்பு ஒன்று வழங்கி வருகிறது. அவ்வாறுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து, மிகக்குறைந்த எண்ணிக்கையில்இருந்த குருவிகள், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையாகபெருகி உள்ளன.

அந்த இனத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் முன்வரவேண்டுமெனவும், இயந்திர மயமாகி விட்ட இக்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க சிட்டுக்குருவிகள் பெரும்
பங்கு வகிப்பதாகவும், விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கவும்,அவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதியான இன்றைய தினத்தை,சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை, கடந்த 2010ஆம்ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளும் அனுசரித்து வருகின்றன.


சிட்டுக்குருவிகளை காப்போம், 
சிட்டுக்குருவிகள்விரும்பி உண்ணும் தானியங்களை பயிரிடுவோம் 

என்றஉறுதிமொழிகளை மனதில் ஏற்கும் வகையில் உறுதிஎடுப்போம்…..

சிட்டுக்குருவி இனத்தை அழிவிலிருந்து மீட்டெடுப்போம்….

இயற்கை சுழற்சியினை பாதுகாப்போம்......

சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு....





இப்படி அமைத்ததனால் எங்கள் வீட்டினைசுற்றி வரும் குருவிகளின் ஆர்ப்பரிப்பு





முயற்சி செய்வோம் இயற்கையினை காப்போம்....





Monday 3 March 2014

மரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி

மரபணு மாற்றபட்ட விதைகளினை களப்பரிசோதனை செய்ய அனுமதி:-


மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு இந்தியாவில் இருந்து வந்த தடையை திடீர் என்று நீக்கி, கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருக்கிறார், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.இதையடுத்து, 200 விதமான பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை களமாக இந்தியா மாறியிருக்கிறது.இந்த விஷயம் நாடுமுழுக்க இருக்கும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திருமதி ஜெயந்தி நடராஜன் இருந்தபோது மரபணு மாற்றபட்ட விதைகளின் களப்பரிசோதனைக்கு தடை விதித்திருந்தார்.அந்த தடை தான் தற்போது விலக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்பவை, இயற்கைச் சூழலை சிதைப்பவை. பாரம்பரியமாக இருக்கும் விதைகளையெல்லாம் ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் வாங்க வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காகவே... மரபணு மாற்றப்பட்ட விதைகள் இங்கே திணிக்கப்படுகின்றன. 

ஏற்கெனவே 260 மில்லியன் டன் உணவு உற்பத்தி இங்கே நடக்கிறது. இதுவே இந்தியாவின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், உற்பத்தியை பெருக்குவதற்காகத்தான் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி என்று சொல்வது... கேலிக்குரியது.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், மனித உயிர்களுக்கு கேடு விளைவிப்பவை. எனவே இவற்றை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, இந்தியர்களின் உயிருக்கு உலை வைப்பதற்கு சமம்.

ஆனால், இது எதையும் கவனத்தில் கொள்ளாமல், அனுமதி கொடுத்திருக்கின்றார் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி.

மரபணு பொறியியல் ஒப்புதல் குழுவால் (Genetic Engineering Appraisal Committee) கடந்த மார்ச்மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அரிசி, கோதுமை, சோளம், ஆமணக்கு, பருத்தி, மேலும் 200 க்கும் மேற்பட்ட பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கான பரிசோதனை செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல்  அமுலுக்கு வந்த மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், மத்திய அரசால் கள பரிசோதனை செய்ய வழங்கப்பட்ட  அனுமதி, அவர்கள் ஒப்புதல் கொடுத்த ஆண்டில் நடத்தப்பட வில்லை  என்றாலும் கூட, அடுத்தடுத்த ஆண்டுகளில் செல்லத்தக்கது என்றும் ஆனால் மாநில அரசு தடையில்லாச்சான்று கொடுத்தால் மட்டுமே களப்பரிசோதனை செய்ய இயலும்.

பஞ்சாப், அரியானா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற சில மாநிலங்களில் களப்பரிசோதனை மேற்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது, அரசாங்கம் பிடி பருத்தியில் ( மரபணு மாற்றப்பட்ட பருத்தி   ) வணிக ரீதியான உற்பத்தி அனுமதிக்கிறது  . பிடி கத்தரிக்காய் அதன் கள பரிசோதனையில் வெற்றி பெற்றது என்றாலும், சமூக குழுக்களினால் ஏற்பட்ட  வலுவான எதிர்ப்புக்கள் காரணமாக வணிக ரீதியிலான உற்பத்தி மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி அளிக்கப்படவில்லை

ஒன்று படுவோம் போராடுவோம் மரபணு மாற்றப்பட்ட விதைகளினை அனுமதியோம்....

எதிர்ப்பினை இங்கே பதிவு செய்யுங்கள்

அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகளுடன் Tweet செய்யுங்கள் இங்கிருந்து நேரிடையாக