Sunday 17 November 2013

வெட்டிவேர்-ஓர் பார்வை

வெட்டிவேர்:-

    
வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடலாம். இதன் வேர்  மணத்துடன் இருக்கும்.  இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும்

மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.

தாவரக்குடும்பம் -: POACEAE.

தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.

வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.


இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும், 10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும். இதில் கவனிக்கப் படவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண்??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்'' என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.பல்வேறு நாடுகளில் மண் அரிப்பைத்தடுக்கவும்,நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை பயன்படுத்துதலும் இல்லை.வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது
கரையோரம் மண் அரிப்பைத்தடுக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது.


வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில்
கழிவு நீர் சுத்திகரிக்க வெட்டிவேர் நடப்பட்டுள்ளது
மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

கரையோரம் மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

வெட்டிவேர் நன்கு வளர்ந்த நிலையில்

மண் அரிப்பைதடுக்க வெட்டி வேர் நடப்படுகிறது

                                            LandFill ல் வெட்டிவேர் நடப்படுகிறது
வெட்டிவேர்

 



எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர்

எங்கள் வீட்டு சமையல் அறை கழிவு நீரை சுத்தம் செய்ய நடப்பட்டுள்ள வெட்டிவேர் அணிவகுப்பு
 
 வெட்டிவேர் இண்டர்நேஷனல் நெட்வொர்க்கின் வலை முகவரி இங்கே





Friday 15 November 2013

இ.எம்.கலவை (E.M Solution)-ஓர் பார்வை

இ.எம்.கலவை:-

எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம். 
இத்திரவத்தில் நுண்ணுயிர்கள்  உறக்கநிலையில் இருக்கும்.

சிறந்த நுண்ணுயிரிகள் (ஈஎம்) என்றால் என்ன?

நுண்ணுயிரிகள் வெறும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறியதாக இயற்கையில்  எல்லா இடங்களிலும் இருக்கும் .சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் நுண்ணுயிரிகளின் பங்கு முக்கியமானது. நுண்ணுயிர்களில் ஏற்படும் இரசாயன மாற்றம்  மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்கள் வாழ உதவியாக உள்ளது என்றால் அதில் மிகையில்லை.நுண்ணுயிரிகளில் இரண்டுவகை நுண்ணுயிரிகள் உள்ளன.நன்மை தரவல்லவை. தீங்கு தரக்கூடியவை.

ஈஎம் தோற்றம்

1982 ல் Ryukyus பல்கலைக்கழகம், ஒகினவா ஜப்பானினைச்சார்ந்த Dr.Higa இயற்கையாகவே,சில நுண்ணுயிரிகள் கூட்டங்கள் நன்மை செய்கின்ற வகையில் செயல்படுகின்றன என கண்டறிந்தார்.அப்படி கண்டறியப்பட்ட நுண்ணுயிர் கூட்டங்களுக்கு ஈஎம் (சிறந்த நுண்ணுயிரிகள்)என பெயரிட்டார்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. 

ஈஎம் பூச்சி கொல்லியாக பயன்படுத்துதல்:-

ஈஎம் கலவையினை  ஒரு  இரசாயன கலப்பல்லாத பூச்சிகளை விரட்டும் கலவையாக பயன்படுத்தலாம். இது தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் பரவுதலை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. இது தாவரங்களினைச்சுற்றி ஒரு அரண்போல அமைந்து நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

ஈஎம் கலவை தயாரித்தல்:-

நல்ல வெதுவெதுப்பான
குளோரின் கலக்காத நீர்                              :-     300 மில்லி

வெல்லப்பாகு                                                  :-      50 மில்லி

வினிகர்                                                              :-       50 மில்லி

எத்தில் ஆல்கஹால்                                   :-        50 மில்லி

ஈ.எம் திரவ செறிவுகள்                               :-        50  மில்லி

ஈ.எம் கலவை தயாரிக்க தேவையான அளவிலான கொள்கலனினை எடுத்துக்கொண்டு  வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லப்பாகு  சேர்த்து நன்கு கலந்து பின்னர், வினிகர் சேர்த்து நன்கு கலக்கி அத்துடன்  எத்தில் ஆல்கஹால் மற்றும் ஈஎம் சேர்க்க வேண்டும்.பின் கலக்கப்பட்ட கலவையினை   பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதில்  நறுக்கப்பட்ட பூண்டு சிறிய அளவில் சேர்த்து பிளாஸ்டிக்பாட்டிலின் முகப்பினை முடிந்தவரை  இறுக்கமாக மூடி இருண்ட இடத்தில் வைக்கவேண்டும்.நாள்தோறும் இருமுரையாவது முகப்பினை திறந்து உருவாகும் வாயுக்களினை வெளியேற்ற வேண்டும்.ஒரு இனிப்பு பழ வாசனை வரத்துவங்கி விட்டால் ஈஎம் பயன்படுத்த தயாராக உள்ளது.இக் கலவையினை  3 மாதங்களுக்கு ஒரு சீரான வெப்பநிலை கொண்ட ஒரு இடத்தில் சேமிக்கலாம். பூண்டு சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால், சேமிக்கும் முன் வடிகட்ட வேண்டும்.இக்கலவையினை  குளிர்சாதன பெட்டியில் சேமிக்க கூடாது.

ஈஎம் பூச்சிகளை விரட்டும் கலவையாக  பயன்படுத்துதல்:-

20 மில்லி ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் பயிர் நனையுமாறு தெளிக்கவேண்டும்.தெளித்தல் பணி விதைகள் உருவாகும் முன்னரே அல்லது செடிகள் உருவாகும் முன்னரே அல்லது நோய்த்தாக்குதல் ஆரம்பமாகும் முன்னரே செய்யவேண்டும்.நோய்த்தாக்குதல் ஆரம்பித்து விட்டால் 30 மில்லி  ஈ.எம் கலவையினை 2 லிட்டர் சுத்தமான தண்ணீருடன் கலந்து தெளிப்பான் மூலம் காலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.

ஈஎம் ஓர் இயற்கை தயாரிப்பு:-

ஈஎம் எனப்படுவது கலவையில் நன்மையுள்ள நுண்ணுயிர்கள் உள்ளன என கண்டறிய பயன்படுத்தப்படும் ட்ரேட் மார்க் ஆகும்

ஈஎம் ஆக்சிஜன் உயிர் வாழ தேவைப்படும் காற்று நுண்ணுயிரிகளும் ஆக்சிஜன் உயிர் வாழ தேவை இல்லாத நுண்ணுயிரிகளும் இணைந்து உள்ளது.

ஈஎம் மண்ணிற்குள் இருக்கும் நுண்ணுயிர்களுடன் ஒன்று சேர்ந்து மண்வளத்தை பாதுகாக்கிறது.

ஈஎம்  நச்சு அல்லது நோய்  பரப்பக்கூடியதன்று. மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்று சூழலுக்குப் பாதுகாப்பானது.

ஈஎம் பயன்படுத்துதல்   மண் , பயிர் வளர்ச்சி மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.

ஈஎம் உபயோகம்:-

அன்றாட வாழ்க்கையில் வீட்டில் பயன்படுத்தலாம்

சமையலறை கழிவுகளினை மறுசுழற்சி செய்யவும் மற்றும் மதிப்புமிக்க கரிம பொருள் மாற்றவும் செய்யலாம்

மண் கட்டமைப்பு மேம்படுத்த , உற்பத்தி அதிகரிக்க மற்றும் நோய் மற்றும் களைகள் அழிக்க பயன்படுத்தலாம்

அனைத்து வகையான நீர், காற்று, மற்றும் மண் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்க்க;

விவசாயம் மற்றும் தோட்டக்கலை, பழம் மற்றும் பூ சாகுபடிக்கும்;

கால்நடை வளர்ப்பிற்கு

மீன் வளர்ப்பு,

தனிப்பட்ட உடல் சுகாதாரம் மற்றும் நோய்த்ததடுப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள்.

Dr. Teruo Higa அவர்களின்   BENEFICIAL AND EFFECTIVE MICROORGANISMS 

Sunday 10 November 2013

இயற்கை பூச்சி விரட்டி

இயற்கை பூச்சி விரட்டி :-


பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது.

இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை விவசாயிகளுக்கு நன்மை தரவல்லவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இந்த இரண்டு வகை பூச்சிகளும் கொல்லப்படுகின்ரன அல்லது விரட்டப்படுகின்றன. எனவே பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.



பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க இலைகளை தேர்வு செய்யும் முறை:-


1. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். (எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை


தேவையான பொருட்கள்: (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)
1. காட்டாமணக்கு – 1/2 கிலோ
2. குமிட்டிகாய் – 1/2 கிலோ
3. ஊமத்தை – 1/2 கிலோ
4. பீச்சங்கு – 1/2 கிலோ
5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
6. எருக்கு – 1/2 கிலோ
7. அரளி – 1/2 கிலோ
8. நொச்சி – 1/2 கிலோ
9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
10. ஆடா தோடா – 1/2 கிலோ
11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
12. வேம்பு – 1/2 கிலோ
13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ
14. மாட்டு சாணம் – 1/2 கிலோ
15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ


மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது 5 வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும். அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம்.


பயன்படுத்தும் முறை:

இலைவழி ஊட்டம்/தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.

சிறப்பான தன்மைகள்:

1  எளிதில் தயாரிக்கலாம்
2. குறைவான முதலீடு
3.தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் எவ்விதமான விஷ வீழ்படிவையும் ஏற்படுத்தாது.
4. இயற்கையை பாதிக்காதவை
பூச்சிவிரட்டி கரைசல் 75% பூச்சிவிரட்டியாகவும் 25% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் மற்றும் நோய் தடுப்பானாகவும் செயல்படுகின்றது.

நன்றி:-
வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர்

Saturday 2 November 2013

தீபாவளி-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத தீபாவளியினை கொண்டாடுவோமே....

தீபாவளி:-
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி தான்.புது ஆடை,பட்டாசு,இனிப்பு வகைகள்.குதூகலமான பண்டிகை.ஆனால் நாம் கொண்டாடும் பண்டிகை நம் எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயற்கையின் படைப்புகளினை அழிக்கும் வகையில் கொண்டாடுவது நியாயமா.சிந்திப்போமா.அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டாம் எனக்கூறவில்லை.கொண்டாடுவோம் மகிழ்ச்சியாக ஆனால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில்.

தீபாவளி கொண்டாடுவதால் சுற்றுப்புறத்திற்கு என்ன கெடுதல் என்கிறீர்களா?

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படுகின்ற முக்கிய சுற்றுச்சூழல் பாதிப்புகள்

பட்டாசுகள் மூலம் காற்று மாசு (Air Pollution)
பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு(Noise Pollution)
அளவுக்கதிகமான நுகர்வு(Excessive Consumerism)

பட்டாசுகள் மூலம் காற்று மாசு:-

 பெரும்பாலான மக்களுக்கு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று.தீபாவளி கொண்டாடும் போது பட்டாசு வெடிப்பது என்பது மிகவும் பொருத்தமான அவசியமான ஒன்றாக தெரிகிறது.ஆனால் சிறிய அளவிலான   மக்களுக்கு மாசுபட்ட நகரங்களில், பட்டாசுகள் வெடிப்பது தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ஆனால் இதனால் ஏற்படும் தீவிர காற்று மாசுபாடு சுற்றுப்புறத்தினை மாசுபடுத்திகின்றன என உணர ஆரம்பித்துள்ளனர். பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் நச்சு பொருட்கள் அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு தடையாக உள்ளது.வெளியிடப்படுகின்ற நச்சு வாயுக்கள் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் சத்தம் அதிக அளவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மகத்தான துன்பத்தை ஏற்படுத்தும்.


துரதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பட்டாசுகள்  பெரும்பாலும் மிக இளம் குழந்தைகளால் செய்யப்படுகின்றன.பட்டாசு தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்ற  பொருட்களில் மிகவும் நச்சுத்தன்மை இருப்பதால் குழந்தை தொழிலாளர்கள் பலர் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்படுகின்றனர்.மேலும் பட்டாசு தயார் செய்யும் போது விபத்துகளினால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களிலால் ஏற்படும் தீய விளைவுகள் :-

   வேதியியல் பொருள்கள்                                     விளைவிக்கும் தீங்கு
தாமிரம்                                                                           சுவாசக்குழாய் எரிச்சல்
கேட்மியம்                                                   இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு
ஈயம்                                                                           நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
மெக்னிஷியம்                         தூசி மற்றும் புகைகள் உலோக FUME காய்ச்சலை ஏற்படுத்தும்
சோடியம்                                                                         தோல்வியாதி
துத்தநாகம்                                                                      வாந்தி ஏற்படும்
நைட்ரேட்                                                                        மன அமைதி பாதிக்கப்படும்
நைட்ரைட்                                                                       புத்தி பேதலித்து கோமா ஏற்படும்

பட்டாசுகள் மூலம் இரைச்சல் மாசு

125 டெசிபலிற்கு மேல் வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தொலையில் ஒலி அளவினை ஏற்படுத்தும் பட்டாசுகளினை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலியினால் காது கேளாமை,உயர் இரத்த அழுத்தம்,இருதய கோளாறு,தூக்கமின்மை போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.



அளவுக்கதிகமான நுகர்வு

மனிதனால் உருவாக்கப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையினால் நமக்கு கிடைக்கும் பொருள்கள் கொண்டே.அதாவது பிளாஸ்டிக்,இரும்பு,துணி இவற்றிற்கான மூலப்பொருள்கள் அனைத்தும் இயற்கையின் மூலமாக நேரிடையாக கிடைக்கின்றன.இந்த மூலப்பொருள்கள் அனைத்தும் நம்மால் உருவாக்க இயலாது.அதாவது இந்த மூலப்பொருள்கள் அனைத்தையும் புதுப்பிக்க இயலாது.புதுப்பிக்க இயலாத இயற்கை பொருள்களின் சிதைவு  மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

நாம் தூக்கி எறியும் திட கழிவான மக்க இயலாத பொருள்கள்  நம்மை விட்டு நீஙக அதாவது இயற்கையோடு இரண்டற கலக்க நீண்ட வருடங்கள் ஆகும்.

இயற்கை பாதுகாப்பு  ஐந்து கோட்பாடுகளினை உள்ளடக்கியது.இந்த கோட்பாடுகளை வைத்து முக்கியமான நமது  இயற்கை சூழலை பாதுகாக்க முடியும் -

குறைக்க            :    நாம் பயன்படுத்தும் பொருட்கள் அளவைனை குறைப்பது
மறுபயன்பாடு :    பயன்படுத்தும் பொருள்களினை அதன் ஆயுற்காலம்                                                       முழுதும் பயன்படுத்துவது
மறுசுழற்சி:            மறுசுழற்சி செய்ய இயலும் பொருள்களினை மறு சுழற்சி 
                                    செய்வது
மறுபரிசீலனை:   நாம் ஏதாவது வாங்க தீர்மானிக்கும் போது தேவையா இந்த                                         பொருள்,என சிந்தனை செய்வது
மறுக்கும்:                தேவையின்றி பொருள்களினை வாங்க மறுப்பது.

இந்த சிந்தனைகளினை பின்பற்றி அதாவது நினைவினில் நிறுத்தி பண்டிகைகளினை கொண்டாடுவோம்.

உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....