Sunday 28 July 2013

மரபு சாரா எரிசக்தி -சூரிய மின்சக்தி மானியம் பெற

மரபு சாரா எரிசக்தி -சூரிய மின்சக்தி மானியம் பெற




சோலார் பேனல் மான்யத்திற்கு ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம்.

              வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 

                   ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில்www.teda.in இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும். இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது. பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

              ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும் .அதாவது ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.. 






Tamilnadu Energy Policy 2012
Manufacturer_list_new_2013


Thursday 25 July 2013

இந்தியனாக இருப்போம் இந்தியனாக வாழ்வோம்

இந்தியனாக இருப்போம்.....
இந்தியனாக வாழ்வோம்.....
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.....
இந்தியாவிற்காக வாழ்வோம்.....

இதைப்பார்த்த பின்பாவது.....

கண்ணீர் வரவில்லை என்றால் .......


அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?





அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???

நன்றி:I LOVE TAMILNADU

Wednesday 24 July 2013

திடக்கழிவு மேலாண்மை -அறிந்து கொள்வோம்


அறிந்து கொள்வோம் குப்பைகளினை கையாளும் விதங்களினை

”மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”

என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.பாரதியின் கூற்றுப்படி இன்றைய காலகட்டத்தில் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரங்களினை குப்பைகளினை கையாளும் விதங்களினை கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம்.

நம் நாடு பல்வேறு இயற்கை வளங்களினை தன்னகத்தே கொண்டது.காடுகள்,மலைகள்,நீர்வீழ்ச்சிகள்,ஆறுகள்,விலங்கினங்கள்,ஏரிகள்,குளங்கள்,நீர்வீழ்ச்சிகள்,தாவரவகைகள் நிறைந்த நாடு நம்நாடு.இயற்கை வளங்களினை அனுபவிக்க நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றனர்.நாம் எதிர்காலச்சந்ததியினருக்கு அந்த இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோமா? எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

சிறிது சிறிதாக இயற்கை அமைப்பை மாற்றி வருகிறோம்.அழித்து வருகிறோம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

கழிவுகள்:-
பயன்பாடுகள் முடிந்து தூக்கிவீசப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் கழிவுகள் ஆகும்.

இயற்கையில் எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.

பிற விலங்குகளினை கொன்று தின்னும் விலங்குகள் பசியாக இருக்கும் போது மட்டுமே பிற விலங்குகளினை வேட்டையாடி உணவு உட்கொள்ளும்.தனது தேவை நிறைவேறிய பிறகு கொன்ற விலங்கின் மீதத்தை அப்படியே விட்டுச்செல்லும்.அப்படி எஞ்சியவற்றினை பிறவிலங்குகளான கழுதைப்புலி,கழுகு முதலானவைகள் உட்கொள்ளும்.அதிலும் எஞ்சியவற்றினை சிறிய பூச்சியினங்கள் உட்கொள்ளும்.அதிலும் மீதமானவை பாக்டீரியா,பூஞ்சைகள் ஆகியவற்றால் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படும்.இவ்வாறு இயற்கை அமைப்பில் எந்த பொருளும் வீணாவதில்லை.இயற்கை சுழற்சியின் அடிப்படையில் அனைத்தும் மற்சுழற்சிக்கு உட்பட்டவையே.உயிரினச்சுழற்சி இயற்கை அமைப்பினை சமன் செய்கிறது.மனித செயல்பாடுகளாலும் பெருகி வரும் கழிவுகளாலும் இந்த இயற்கை சுழற்சிகள் தடைபடுகின்றன.

நாம் நைத்துவகை கழிவுகளினையும் கலந்து இயற்கை அழிவுகளினைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் வெளியேற்றுகிறோம்.நாம் உருவாக்கும் கழிவுகள் நம்மை விட்டு நீங்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா?

காய்கறி மற்றும் பழங்கள்              :-             1-2 மாதங்கள்
காகிதங்கள்                                           :-             1-2 மாதங்கள்
தெர்மக்கோல்கப்,தட்டுக்கள்        :-              50 வருடங்கள்
கேன்                                                       :-               80-200 வருடங்கள்
டயாப்பர்ஸ்                                         :-               450 வருடங்கள்
பிளாஸ்டிக்கவர்கள்                        :-               50-1000 வருடங்கள்
பாட்டில்கள்                                         :-               1 மில்லியன் வருடங்கள்

குப்பைகளினை தூக்கி வீசுவது என்பது மிக எளிது ஆனால் அதனை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமான பணி.

நாம் என்ன செய்யவேண்டும்:

குப்பைகளினை மக்கும் குப்பை மக்காத குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்கவேண்டும்.

குப்பைகள் உருவாவதை குறைக்கவேண்டும்
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளினை மறுசுழற்சி செய்யவேண்டும்.
மறு உபயோகப்படுத்த இயலும் கழிவுகளினை மறு உபயோகப்படுத்தவேண்டும்


இன்றே துவங்குவோம்

எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்.

குப்பைகள் கையாளும் விதங்கள் பற்றிய சிறு விளக்கப்படம் .




Download this Post as PDF



Tuesday 23 July 2013

மண்புழு உரம்.....

மண்புழு உரம்.....


மண்புழு உரம் இயற்கை நமக்குத்தந்த இனிய வரம் ஆகும்.இயற்கையில் கிடைக்கின்ற கழிவுகளினை உட்கொண்டு அவற்றின் குடல்களில் உள்ள நுண்ணுயிர் மற்றும் நொதிகளினால் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக வெளியேற்றப்படும் கழிவுகளே மண்புழு உரம்.

மண்புழு உரத்திற்கும் இரசாயன உரத்திற்கும் என்ன வேறுபாடு.

இரசாயன உரம் மண்ணை மலடாக்குகிறது.
மண்புழு உரம் மண்ணை பலப்படுத்துகிறது.மண் வளத்தினை பாதுகாக்கிறது.தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.இயற்கை விவசாயம் மண்புழுக்கள் உதவியுடன் தான் நடைபெறுகிறது.

மண்புழு உரத்தினை 3 முறைகளில் தயாரிக்கலாம்.
1.குழி முறை
2.பெட்டி முறை
3.படுக்கை முறை

 இந்த மூன்று முறைகளில் தயாரிக்கப்படும் உரங்களில் வேறு பாடுகிடையாது.ஆனால் பெட்டி முறையில் மண்புழு உரம் தயாரிப்பது சிறந்தது.

மண்புழு உரப்படுகை
மண்புழுக்கள்

மண்புழு உரம் தயாரித்தல்:

முதலில் நமக்கு தேவையான இடத்தினை சமமாக ஆக்கிக்கொள்ளவும்
அதன் மேல் நன்கு காய்ந்த தேங்காய் கரம்பு அல்லது தேங்காய் நாரினை 
பரப்பவும்.அதன் மீது சாணக்கரைசலை தெளிக்கவும்.பின்பு மக்கிய காய்கறிகழிவுகள்,இலைமக்குகள்,மண்புழுக்கள் எதை எல்லாம் எளிதாகச்சாப்பிடுமோ அதை எல்லாம் அதன் மீது 2 அல்லது 2.5 அடி உயரத்திற்குப்போடவும்,மண்புழுக்களினை போடவும்.அதன் மீது தண்ணீர் தெளிக்கவும்.இரண்டு நாட்கள் அப்படியே விட்டுவிடவும்.ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளவும்.

அடிக்கடி தண்ணீர் தெளித்து ஈரமாக வைத்துக்கொள்ளவும்.அதிகம் தண்ணீர் கெடுதலைனை விளைவிக்கும்.நான்கு வாரம் முதல் ஆறு வாரங்களுக்குள் இந்த குவியல் எல்லாம் மக்கிப்போயிருக்கும்.புழுக்களின் எண்ணிக்கைக்குத்தகுந்தார்போல் கழிவுப்பொருள்கள் எல்லாம் மக்குவதற்கு காலம் மாறுபடும்.இப்போது மக்கியகழிவுகள் கருப்பாகவும் எடை குறைந்தும் இருக்கும்.இவை தான் மண்புழு உரம்.அவை பயன்படுத்த தயாராகிவிட்டது.

இப்போது மண்புழு உரம் தயாரிப்புக்கென HDPE தார்ப்பாலின் ஷீட் கொண்ட வெர்மி பெட் (VERMI BED) தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது.அர்ஜூன் தார்பாலின் இண்டஸ் ரீஸ் தாயாரித்து விற்பனைக்கு தருகிறது.வாங்கி பயன் படுத்தலாமே.வீட்டில் சேரும் காய்கறிக்கழிவுகள் மற்றும் இலைக்கழிவுகள் ஆகியவற்றினைக்கொண்டு உரம் தயாரிக்கலாம்.அதனினை வீட்டுத்தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.
அர்ஜூன் தார்பாலின் உற்பத்தியாள்ர்களினை தொடர்பு கொள்ள
முகவரி:-
Sri Arjun Tarpaulin Industries
Arjun Towers, 47, Rajaji Road, Salem - 636007, Tamil Nadu, India
செல் பேசி:-+919442212345

இயற்கையினை பாதுகாப்போம். குப்பைகள் உருவாவதைக்குறைப்போம்

Monday 22 July 2013

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை

உண்ணும் முன் ஒரு கணம் எண்ணுங்கள் -சர்க்கரை (சீனி)


நாள் தோறும் நாம் உண்ணும் பொருள்களான காப்பி,தேநீர்,சாக்லேட்,இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் சீனி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்படுகின்ற அஸ்கா சர்க்கரை பயன்படுத்துகின்றோம்.ஆனால் இந்த வெள்ளைச்சீனி நமது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எண்ணிப்பார்ப்பதில்லை.சீனியின் வரலாற்றினையும் அது பிறக்கும் முன் எத்தனை விதமான ரசாயனக்கலவைகளில் குளித்து வருகிறது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போது தான் சீனியின் உண்மையான குணத்தினை அறிந்து கொள்ளமுடியும்.கரும்பிலிருந்து பிழியப்பட்ட சாறுடன் ஏழு நிலைகளில் பல்வேறு வேதிப்பொருள்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றது.அவையாவன

1.அமோனியம் பை புளூயிடு பாக்டீரியா
2.பாஸ்போரிக் அமிலம்
3.சுண்ணாம்பு நீர்
4.சல்பர் டை ஆக்ஸைடு
5.பாலி எலக்ரோலைட்
6.காஸ்டிக் சோடா,சலவை சோடா
7.சோடியம் கைட்ரோ சல்பைட்

இவ்வாறு ஏழு நிலைகளில் கருப்புச்சாறுடன் வினை புரிகின்ற இந்த நச்சுப்பொருள்கள்யாவும் இறுதியில் கழிவாக போய்விடுகின்றதா? என்றால் இல்லை.சல்பர் டை ஆக்ஸைடு ஆர்சனிக் என்ற பொருளும் சீனியுடன் கூடவே தங்கி விடுகிறது.ஆறு மாதம் கழித்து வெள்ளைச்சீனி இளமஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.இந்த இளமஞ்சள் சீனியில் தான் ஆபத்துல் நச்சுத்தன்மையும் அதிகம் உள்ளது.இனிப்பு பண்டங்கள் செய்து நாளாகி விட்டாலும் இதே போன்ற நிலை ஏற்பட்டு நச்சுத்தன்மை உருவாகிறது.இது மெல்லகொல்லும் நஞ்சாகும்.நஞ்சாகி விட்ட அதாவது இளமஞ்சள் நிறமாகிவிட்ட சீனியின் நிறத்தை மறைக்க இனிப்பு பண்டங்களுக்கு பல்வேறு வண்ணங்கள் கொடுக்கின்றனர்.கடைகளில் விற்கப்படும் இனிப்புகளில் கிலோ ஒன்றிற்கு  கிராம் வெள்ளைச்சீனி உள்ளது.



அரைக்கப்பட்டு பாகாக மாற்றப்படுகிறது

பாகு உருவாகிறது

சர்க்கரையாக மாற்ற சுண்ணாம்ம்புக்கரசல் சேர்க்கப்படுகிறது

பாகுவுடன் வேதியியல் பொருள்கள் சேர்க்கப்படுகின்றது

சர்க்கரையாக மாற்றப்படுகிறது

சர்க்கரையாக மாற்றப்படுகிறது
சர்க்கரை 


மூட்டையாக கட்டப்படுகின்றது

         
சாதாரணமாக கரும்பை நாம் கடித்து சுவைத்து சாப்பிடுகின்றோம்.அப்போது நேரிடையாக உட்கொள்ளும் கருப்புச்சாறு எவ்வித நச்சுத்தன்மையும் ஏற்படுத்துவதில்லை.கருப்புச்சாறு நமது குடலிலும் உடலிலும் எளிதாகச்சேருவதற்கும் செரிமான மண்டலத்தில் எளிமையாக வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறவும் பல வினையூக்கிகளினை இயற்கையே சாற்றினுள் சேர்த்து வைத்துள்ளது.அப்படிப்பட்ட மருந்தாகும் சத்துக்களையே சுத்தம் செய்வது என்ற பெயரால் நாம் கழித்து குப்பைகளில் கொட்டுகிறோம் என்பதே உண்மை.இந்த குப்பைகளே மொலாசஸ் ஆகும்.இந்த மொலாசஸ் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்துகின்றோம்.

சீனி தயாரிப்புக்கு ஆலை அமைத்தது அமெரிக்கா.சீனியை மக்கள் அறியாமலும் உண்ணாமலும் வாழ்ந்தகாலத்தில் சர்க்கரை நோய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகக்குறைவாகவே காணப்பட்டது.ஆனால் இன்றோ எங்கெங்கு காணினும் சர்க்கரை நோய் பரவி நிற்கிறது.நீரிழிவு நோய் வந்த பிறகு சீனி சாப்பிடாதே என்று தடைபோடும் மருத்துவர்கள் இதை நோய்வரும்முன்பே கூறுவதில்லை.ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் சீனியைப்பற்றி ஆய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வினை யு என் யு விற்காக ஆஸ்லோ பல்கலைக்கழகம் மேற்கொண்டது.டாக்டர் டேக்பொலிசின்ஸ்கி என்ற மருத்துவ வல்லுநரின் குழு இவ்வாராய்ச்சியில் மேலும் புதிய தகவல்களினைத்தந்தது.நல் மற்றும் நல் என்ற இரு நச்சியியல் வல்லுனர்கள் நஞ்சான சீனி பற்றி பல கண்டுபிடிப்புகளினை தந்துள்ளனர்.நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சீனி நமது இரப்பைக்குச்சென்ற பிரகு அது பிரிந்து வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு உடலில் தன்மயமாவதற்கு வேண்டிய வினையூக்கிகள் ஏதும் சீனியில் இல்லை.அது 99சதவீதம் மாவுப்பொருளேயாகும்.ஆகவே ரத்தத்திலும் எலும்புகளிலும் இன்ன பிற உட்பகுதிகளிலும் சேமிப்பில் இருக்கின்ற கால்சியம்,வைட்டமின்”பி”,சோடியம்,பொட்டாசியம் போன்ற தாதுக்களை சீனி சுரண்டி எடுத்துக்கொண்டு வருகிறது.ஏனெனில் இவை இல்லாமல் சீனி நமது உடலில் கரைந்து சேர முடியாது.எனவே இரத்தத்தில் அமில,கார சமச்சீர் நிலை குறைவு ஏற்படுகிறது.இதுவே நாளடைவில் சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது.சீனி முழுவதுமாக செரிக்கப்படுவதில்லை.எனவே இரைப்பை மற்றும் குடல்களில் வெள்ளைச்சீனி தங்கி விடுகிறது.இதனால் குளுடமிக் அமிலமும் மற்றைய “பி” வைட்டமின்களும் அழிக்கப்பட்டுவிடுகிறது.இதனால் லேக்டிக் அமிலம் போன்ற நச்சுப்பொருள்கள் நரம்பு மண்டலத்தில் அதிகமாகிறது.மூளைச்செல்களுக்கு வேண்டிய ஆக்சிசன் செல்வதைத்தடுக்கிறது.இதனால் அதிகமான சோர்வு,மன அழுத்தம்,மனதளர்ச்சி,குறைந்த இரத்த அழுத்தம்,எதிலும் கவனம் செலுத்த இயலாமை,பல் எனாமல் கெடுதல் போன்ற பல்வேறு கோளாறுகள் தோன்றுன்றன.

பழைமைக்கு திரும்புவோம்.தவறேதும் இல்லை.

கருப்பட்டி,கரும்பு வெல்லம் பயன்படுத்துவோம்

சீனிக்கு விடை கொடுப்போம்

நன்றி.
திரு கோமதிநாயகம் அவர்கள்
இயற்கை விவசாயி
விவசாய சேவாநிலையம்
புளியங்குடி

Download this post as PDF




Sunday 21 July 2013

இயற்கையின் அழகு

இயற்கை நமக்கு அழகான படைப்புகளினை வழங்கியுள்ளது.அப்படி அழகான தாவர அமைப்புகள் இங்கே


















Download this post as PDF

இயற்கையின் அழகு

இயற்கையின் அழகு 

இந்த புண்ணியபூமியில் அனைத்து உயிரினங்களும் அழகானவையே.அதிலும் ஐந்தறிவு படைத்த இந்த உயிரினங்கள் அனைத்திலும் அழகானவையே.அவைகள் உங்கள் பார்வைக்கு........

































Download this post as PDF