Monday 28 October 2013

பவளப்பாறைகள்-ஓர் பார்வை

பவளப்பாறைகள்

பவளப்பாறைகளில் மீன்கள்
பவளப்பாறைகள் கடல்பகுதியில் தட்ப வெட்ப நிலையினை சமப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றால் அதில் மிகைஇல்லை.ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் புவியினை கெடுத்து எதுவெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உதவுமோ அதனையும் அழித்து வருகிறான்.கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.இவைகள் கடலிற்குள் உயிர் வாழ்கின்றன. இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.உலகின் அனைத்து சமுத்திரங்களிலும் பவளப்பாறைகள் உருவாவதில்லை. 
இவை உருவாவதற்கு விசேஷ சுற்றுச்சூழல் அவசியம் ஆகும்.


சமுத்திர நீரின் வெப்பநிலை 20°C - 24°C இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
சமுத்திர நீரின் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரை இருக்க வேண்டும்.
சூரிய ஒளி சமுத்திரத்தின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவ வேண்டும்.
கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்.

பவளப்பாறை அமைப்பு
         கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும். இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.


பவளப்பாறைகளில் உயிரினங்கள்
 இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.

 
அழகிய வடிவத்தில் பவளப்பாறை
கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும். கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும். பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள், கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன.


பவளப்பாறையில் உயிரினங்கள்
இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.


வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன.

கிரேட் பாரியர் ரீஃப் 
உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃப் ஆகும்.இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.

கிரேட் பாரியர் ரீஃப் 
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனைவிண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது.

இலட்சத்தீவில் பவளப்பாறை அமைப்பு
உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது.

கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.

இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது. பவளப்பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

பசுமை அமைதி அமைப்பின் விழிப்புணர்வு 
கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பு செயற்கைகோள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இயற்கை வளத்தை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு .அதிலும் கடல் வளத்தினையும் சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும் கடல் வாழ் உயிரினங்களுக்கு தேவையாக இருக்கும் இந்த பவளப்பாறைகளினை பாதுக்காக்க உறுதி பூணுவோம்.


Sunday 20 October 2013

மூலிகைச்செடிகள் பாகம் 4

மூலிகைச்செடிகள் பாகம் 4:-

மாதுளை:-

வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை, பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் மாதுளையில் 12 முதல் 16 சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது.

மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. உடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கிறது. எனவே வெயிலில் அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம்.

மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=78%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.7%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத்தாது=0.03 யூனிட்
வைட்டமின் C=16 யூனிட்
வைட்டமின் B2=10 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.

வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு. குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.

இதயம் வலிமை அடையும். ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு. வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது. 

இருமலைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதன் தோலையும், கிராம்பையும் சேர்த்து கஷாயம் செய்து உட்கொள்ளக் கொடுக்க, சீதபேதி குணமடையும்.

தொண்டைப்புண் உள்ளவர்கள் இந்த பழத்தின் சாறுடன் சிறிது படிகாரம் சேர்த்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் நாடாப்புழு இருந்தால் மாதுளை மரப்பட்டையுடன் கிராம்பு கலந்து கஷாயம் வைத்து குடிக்க புழுக்கள் இறந்து விடும்.

மார்புச்சளி உள்ளவர்கள் மாதுளைப்பூவைக் காய வைத்து, இடித்து, பொடியாக்கி நாலைந்து அரிசி எடை அளவு சாப்பிட்டு வர சளி கரையும்.
மேலும் வாந்தி, விக்கல், கருப்பையில் உள்ள புண்கள், மயக்கம், அல்சர் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக அமைகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மருந்துக்கு உதவும் பாகம்:-

பழம்,பழ ஓடு,பிஞ்சு

வளர்க்கும் விதம்:-

விதை,குச்சி


Thursday 17 October 2013

மூலிகைச்செடிகள் பாகம் 3

மூலிகைச்செடிகள் பாகம் 3

நிலவேம்பு:-
 நிலவேம்பு இன்று அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகைச்செடியாகும்.அதற்கு காரணம் டெங்குகாய்ச்சல்.தமிழக அரசே நிலவேம்பு குடிநீர் குடிக்க அறிவுறுத்தியது என்றால் அதன் மருத்துவ குணங்கள் தெளிவுற விளங்கும்.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது. இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும்.இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது.

மருந்துக்கு உதவும் பாகம்:-

எல்லா பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டது.

கட்டுப்படும் நோய்கள்:-

நில வேம்பு பசியைத் தூண்டவல்லது.பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது

பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

காய்ச்சல் குறைய நிலவேம்பு 15 கிராம் கிச்சிலித் தோல் 5 கிராம் கொத்துமல்லி 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும்.

விவசாயிகளுக்குத்தேவையான தகவல் களஞ்சியம் .எம் எஸ் சுவாமி நாதன் அவர்களின் ஆராய்ச்சி அமைப்பின் இணையமுகவரியினை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

Wednesday 16 October 2013

இன்று உலக உணவு நாள் (World Food Day)-16.10.2013


இன்று  உலக உணவு நாள் (World Food Day)-16.10.2013

There has been severe drought in Huila province in
 south west Angola
for the past two years. (c) Lilly Peel/Christian Aid
உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த உலக உணவு நாளில் சபதமேற்போம்


உணவுப்பொருள்களினை வீணாக்காமல் இருப்போம்.
பசி பட்டினியால் இருப்போருக்கு தேவையான அளவு உணவு வழங்க உதவுவோம்
இயற்கை அன்னையினை பாதுகாப்போம்.
நீரினை சிக்கனமாக செலவு செய்வோம்.

   The theme of this year’s World Food Day (16 October) is “Sustainable Food Systems for Food Security and Nutrition”Every link in the food chain must be protected and monitored to help ensure the availability and accessibility of diverse, nutritious foods – and enable consumers to choose healthy diets.

10 Things to Know About Food on World Food Day

1. There will be 219,000 people at the dinner table tonight who were not there last night—many of them with empty plates. Ensuring adequate food supplies was once a rather simple matter, the sole responsibility of the ministry of agriculture. When governments wanted to accelerate growth in the grain harvest, they simply raised the support price paid to farmers. Now that is changing.Securing future food supplies has become incredibly complex. It may now depend more on policies in the ministry of health and family planning or of energy than in the ministry of agriculture itself. 

2. Today, with incomes rising fast in emerging economies, there are at least 3 billion people moving up the food chain, consuming more grain-intensive livestock and poultry products. Today, the growth in world grain consumption is concentrated in China. It is adding over 8 million people per year, but the big driver is the rising affluence of its nearly 1.4 billion people. As incomes go up, people tend to eat more meat. China’s meat consumptionper person is still only half that of the United States, leaving a huge potential for future demand growth.

3. In India some 190 million people are being fed with grain produced by overpumping groundwater. For China, there are 130 million in the same boat. Aquifer depletion now threatens harvests in the big three grain producers—China, India, and the United States—that together produce half of the world’s grain. The question is not whether water shortages will affect future harvests in these countries, but rather when they will do so.

4. In Nigeria, 27 percent of families experience foodless days. In India it is 24 percent, in Peru 14 percent. The world is in transition from an era dominated by surpluses to one defined by scarcity. Not eating at all on some days is how the world’s poorest are coping with the doubling of world grain prices since 2006. But even as we face new constraints on future production, the world population is growing by 80 million people each year. 

5. Water supply is now the principal constraint on efforts to expand world food production. During the last half of the twentieth century, the world’s irrigated area expanded from some 250 million acres in 1950 to roughly 700 million in 2000. This near tripling of world irrigation within 50 years was historically unique. Since then the growth in irrigation has come to a near standstill, expanding only 10 percent between 2000 and 2010. 

6. Nearly a third of the world’s cropland is losing topsoil faster than new soil is forming, reducing the land’s inherent fertility. Future food production is also threatened by soil erosion. The thin layer of topsoil that covers the earth’s land surface was formed over long stretches of geological time as new soil formation exceeded the natural rate of erosion. Sometime within the last century, the situation was reversed as soil erosion began to exceed new soil formation. Now, nearly a third of the world’s cropland is losing topsoil faster than new soil is forming, reducing the land’s inherent fertility. Soil that was formed on a geological time scale is being lost on a human time scale. Peak soil is now history. 

7. The generation of farmers now on the land is the first to face manmade climate change. In addition to wells going dry and soils eroding, both at an unprecedented pace, the generation of farmers now on the land is the first to face manmade climate change. Agriculture as it exists today developed over 11,000 years of rather remarkable climate stability. It has evolved to maximize production within that climate system. Now, suddenly, the climate is changing. With each passing year, the agricultural system is more and more out of sync with the climate system.

8. At no time since agriculture began has the world faced such a predictably massive threat to food production as that posed by the melting mountain glaciers of Asia. Mountain glaciers are melting in the Andes, the Rocky Mountains, the Alps, and elsewhere, but nowhere does melting threaten world food security more than in the glaciers of the Himalayas and on the Tibetan Plateau that feed the major rivers of India and China. Ice melt helps sustain these rivers during the dry season. In the Indus, Ganges, Yellow, and Yangtze river basins, where irrigated agriculture depends heavily on rivers, the loss of glacial-fed, dry-season flow will shrink harvests and could create potentially unmanageable food shortages. 

9. After several decades of raising grain yields, farmers in the more agriculturally advanced countries have recently hit a glass ceiling, one imposed by the limits of photosynthesis itself. In Japan, the longtime leader in raising cropland productivity, the rise in the yield of rice that began in the 1880s essentially came to a halt in 1996. Having maximized productivity, farmers ran into the inherent limits of photosynthesis and could no longer increase the amount they could harvest from a given plot. In China, rice yields are now just 4 percent below Japan’s. Unless China can raise its yields above those in Japan, which seems unlikely, it, too, is facing a plateauing of rice yields. Yields of wheat, the world’s other food staple, are also plateauing in the more agriculturally advanced countries. For example, France, Germany, and the United Kingdom —Europe’s leading wheat producers—had been raising wheat yields for several decades, but roughly a decade ago, all three hit plateaus. Corn yields in the United States, which accounts for nearly 40 percent of the world corn harvest, are starting to level off. Yields in some other corn-growing countries such as Argentina, France, and Italy also appear to be stagnating. 

10. To state the obvious, we are in a situation both difficult and dangerous. The world today desperately needs leadership on thefood security issue to help the world understand both the enormity of the challenge we face and the extraordinary scope of a response, one that, among other things, requires a total restructuring of the energy economy. The scale of this economic restructuring is matched only by the urgency of doing so. Political leaders talk about cutting carbon emissions 80 percent by 2050, but if we stay on the current trajectory the game will be over long before then. If we want to stabilize climate, we need to cut carbon emissions far more rapidly. President Obama needs to understand both the gravity and urgency of the tightening food situation and the consequences of leaving it unattended. We are not looking at 2030 or 2050. We are looking at an abrupt disruption in the world food supply that could be just one poor harvest away.

To learn more about global food security see Full Planet, Empty Plates: The New Geopolitics of Food Scarcity (W.W. Norton, 2012) by Lester R. Brown.


Wednesday 2 October 2013

எதிர்ப்பினை பதிவு செய்வோம்

எதிர்ப்பினை பதிவு செய்வோம்


ஆர்டிக் கடல் பகுதியில் ரஷ்ய அரசின் நிறுவனமான Gazpromஆல் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணைய் உற்பத்தியினால் கடல் பகுதி மாசு படுவது குறித்து செப்டம்பர் 18 இல் கிரீன் பீஸ் அமைப்பினர் மேற்கொண்ட ஆர்பாட்டதினை ஒடுக்கும் வகையில் ரஷ்ய படையினரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட  30 கிரீன் பீஸ் அமைப்பினரினை எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் விசாரணையினை நிலுவலியில் வைத்து 2 மாத சிறைதண்டனைக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பசுமையினை பாதுகாக்கவும் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அற்புதங்களினை விட்டுச்செல்லவும் போராடும் சுற்றுப்புற ஆர்வலர்களினை கைது செய்வது எவ்விதத்தில் நியாயம்.

நம் எதிர்ப்பினை பதிவு செய்வோம்.இயற்கையின் அற்புதங்களினை பாதுகாப்போம் என்ற குறிக்கோளோடு ரஷ்ய தூதரகத்திற்கு இமெயில் அனுப்புவோம்.

இமெயில் அனுப்ப இங்கே சொடுக்கவும்

In English:

On September 18, a small group of Greenpeace International activists approached the Gazprom Prirazlomnaya oil platform, in the Pechora Sea off the Russian coast, to engage in a peaceful protest of Arctic oil drilling. Two activists were detained and held overnight on a Russian Coast Guard vessel.

The following day, September 19, the Russian Coast Guard illegally boarded the Greenpeace International ship Arctic Sunrise while in international waters. All 30 members of the crew were held under armed guard for 5 days as the ship was towed to the port of Murmansk. Upon arrival, the activists were taken from the ship and held by authorities on land.

On September 26th, 28 of our activists, along with a photographer and videographer who were documenting the action, appeared at a preliminary court hearing in Murmansk, where most of them were remanded in custody for two months, facing investigation for possible piracy. We are demanding the immediate release of all activists, our ship, and an end to offshore oil drilling in the Arctic for good.

Greenpeace activists scaled Gazprom oil rig in the Arctic
Greenpeace activists in court. September 26
In this image released by environmental organization Greenpeace, a Russian Coast guard officer, right, points a gun at a Greenpeace International activist, left in yellow uniform, as five activists attempt to climb the Prirazlomnaya, an oil platform operated by Russian state-owned energy giant Gazprom platform in Russia's Pechora Sea.PHOTO: (AP PHOTO/GREENPEACE, DENIS SINYAKOV)

A handout photo taken by Greenpeace on September 18, 2013, shows Greenpeace activists boarding Gazproms Prirazlomnaya Arctic oil platform somewhere off Russia north-eastern coast in the Pechora Sea