Friday 21 March 2014

சிட்டுக்குருவி -ஓர் பார்வை


பறவை இனங்களில் மிகச் சிறிதாகவும், அனைவரையும் கவரும் வகையில் கீச் கீச் எனக் கூக்குரலிடுவதுசிட்டுக்குருவியாகும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சீட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல் வெளிகள் வீட்டு மனைகளாக்கப்பட்டு விட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் பறந்து திரியும் சின்னஞ்சிறியசிட்டுக்குருவிகளை பார்த்து மகிழ்ந்த காலம் போய்,தற்போது சிட்டுக்குருவி இனமே இல்லை எனுமளவுக்கு குறைந்துகாணப்படுகிறது. அவ்வாறு அவற்றின் இனம் அழிந்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து, பறவையியல் ஆராய்ச்சியாளர்களும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். சிட்டுக்குருவிகள் பறப்பதற்கும், கூடுகள் கட்டி வாழ்வதற்கும்முன்பிருந்த வசதிகள் ஏதும் தற்போதைய நகர வாழ்க்கையில்அவற்றுக்கு கிடைக்காததும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்குகாரணம் என்றும், நவீன செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களாலும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வயல்களில் போடப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிமருந்துகளாலும் அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும்,அதன் மூலம் சிறு குஞ்சுகளுக்கு அத்தியாவசிய உணவானபூச்சி, புழுக்கள் கிடைக்காமல் போயிருப்பதாகவும் அந்த ஆய்வுகள்தெரிவிக்கின்றன

செல்போன் கோபுரங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனமான செல்போன்கள் பெருகி விட்ட நிலையில் நகரங்கள் மட்டும் இல்லாது கிராமப்புறங்களிலும் செல்போன் கோபுரங்கள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் இனம் தொடர்ந்து அழியும் நிலை உருவாகி உள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகளை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 20-ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இம்முயற்சியை தொடங்கி உள்ளன. இதன் மூலம் சிட்டுக் குருவிகள் மற்றும் அழிந்து வரும் இதர பறவை இனங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.அது முதல் தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக் குருவி தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

ஒரு சிட்டுக்குருவின் சராசரி வாழ்நாள், 13 ஆண்டுகள்.ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

 ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களின் பல்வேறு நாடுகளில் பல வகை சிட்டுக்குருவிகள் உள்ளன. புல்வெளி சிட்டுகள், மாலைச் சிட்டுகள், கறுப்புச் சிட்டுகள், காடுகளில் வாழும் நரிச் சிட்டுகள் எனப் பொதுவாகப் பிரிக்கப்படுகின்றன.

தானியங்கள், புழுக்கள், பூச்சிகள், பூக்களின் மொட்டுகள் என அனைத்தையும் சிட்டுக்குருவிகள் உண்ணும். மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் கிளி, புறா போன்று இவை மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது இல்லை. எனவே, இவற்றை செல்லப் பறவைகளாக வளர்ப்பது கடினம்.

சஹாரா பாலைவனப் பகுதியில், மஞ்சள் நிறத்தில் அழகாகக் காணப்படும் ஒரு வகை சிட்டுக்குருவி, சூடான் தங்கச் சிட்டுக்குருவி (Sudan Golden Sparrow). மாலை நேரங்களில், ஆயிரக்கணக்கான குருவிகள், கூட்டமாக நகருக்குப் பறந்துவந்து, இரை தேடும்.

சிட்டுக்குருவிகள், சராசரியாக 13 சென்டிமீட்டர் இருக்கும். சிட்டுக்குருவி வகைகளில் மிகப் பெரியது, கிளி சிட்டுக்குருவி (Parrot-billed Sparrow). மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இவை, 18 சென்டிமீட்டர் இருக்கும். எடை சுமார் 40 கிராம்.

சங்க இலக்கியங்களில், 'குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவையே, குருவி என்று மருவியது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியப் பகுதியில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி வகை, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated Sparrow). கழுத்துப் பகுதியில் மஞ்சளாக இருக்கும் இந்த வகையைக் கண்டுபிடித்தவர், பறவையியல் அறிஞர் சலீம் அலி.

உலகின் நவீன மாற்றங்கள் காரணமாக, சிட்டுக்குருவிகள் உலகம் முழுவதுமே அருகிவரும் இனமாக உள்ளன. உலக அளவில் பல வகை சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள சந்தை ஒன்றில்உள்ள வியாபாரிகளுக்கு, சி்ட்டுக்குருவிகளை வளர்க்க தேவையானகூண்டுகளை தனியார் அமைப்பு ஒன்று வழங்கி வருகிறது. அவ்வாறுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து, மிகக்குறைந்த எண்ணிக்கையில்இருந்த குருவிகள், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையாகபெருகி உள்ளன.

அந்த இனத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் முன்வரவேண்டுமெனவும், இயந்திர மயமாகி விட்ட இக்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க சிட்டுக்குருவிகள் பெரும்
பங்கு வகிப்பதாகவும், விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கவும்,அவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதியான இன்றைய தினத்தை,சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை, கடந்த 2010ஆம்ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளும் அனுசரித்து வருகின்றன.


சிட்டுக்குருவிகளை காப்போம், 
சிட்டுக்குருவிகள்விரும்பி உண்ணும் தானியங்களை பயிரிடுவோம் 

என்றஉறுதிமொழிகளை மனதில் ஏற்கும் வகையில் உறுதிஎடுப்போம்…..

சிட்டுக்குருவி இனத்தை அழிவிலிருந்து மீட்டெடுப்போம்….

இயற்கை சுழற்சியினை பாதுகாப்போம்......

சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு....





இப்படி அமைத்ததனால் எங்கள் வீட்டினைசுற்றி வரும் குருவிகளின் ஆர்ப்பரிப்பு





முயற்சி செய்வோம் இயற்கையினை காப்போம்....





No comments:

Post a Comment