Sunday 12 January 2014

போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....

போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....

 தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பதென்பது, பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.துன்பம் ,வறுமை போன்ற குப்பைகளினை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையினை எதிர்கொள்ளும் நாளாகும்.பண்டைய காலங்களில் மழை கொடுத்து விவசாயத்தை பாங்குறச்செய்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக போகிபண்டிகை கொண்டாடப்பட்டது.


   அக்காலங்களில் இதைப்போன்ற பிளாஸ்டிக்,டயர் போன்ற எரிக்கும் போது மாசுபடுத்துகின்ற பொருள்கள் இருந்ததில்லை.மேலும் அவை போன்ற பொருள்களினை எரித்ததும் இல்லை.ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் பிளாஸ்டிக்,ரப்பர் பொருள்கள் போன்றவற்றினை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.போகி கொண்டாடுவதாகக்கூறி தேவையில்லாத பழைய டயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இதனால் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்சைடு,நைட்ரசன் ஆகஸைடு,கந்தக டை ஆக்ஸைடு,டயாக்சின்,ஃபுயூரான்,உள்ளிட்ட புகைகள் வெளிப்படுகின்றன.இவை காற்றில் கலப்பதால் கண்,மூக்கு,தொண்டை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.இதர பல்வேறு உடல் நலக்கேடுகளும் ஏற்ப இப்புகைமண்டலம் காரணமாக அமைகின்றது.மார்கழி மாதம் ஏற்கனவே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் இப்புகைமூட்டமானது வளிமண்டலத்தில் நிரம்பி பார்க்கும் திறனை குறைத்து சாலைப்போக்குவரத்து,இரயில் போக்குவரத்து ,விமான போக்குவரத்து போன்றவையும் பாதிக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துகின்றது.உயர்நீதிமன்றம் பழைய மரச்சாமான்கள், வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. எனவே, போகிப்பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருள்களை எரிக்காமல் பழைய முறையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாவகையில் போகியினை கொண்டாடி மகிழ்வோம்.

இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை(அதாவது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பொருள்களை) மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இந்த தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் ,புதிய உத்வேகத்துடனும்,சுற்றுச்சுழலினை பாதிக்காத வகையில் இருப்போம் எனவும் உறுதியேற்று பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.


உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....

No comments:

Post a Comment