Sunday 18 August 2013

மூலிகைசெடிகள் பாகம்-1

மூலிகைசெடிகள் 

சோற்றுக்கற்றாழை:


இயற்கை நமக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் சோற்றுக் கற்றாழையும் ஒன்று. எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும் பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு, மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெற்ற சோற்றுக் காற்றாழையின் ஏ,பி,சி,ஈ வைட்டமின்கள் அதிகம். அழகாக வெளிநாட்டிலிருந்து பேக்கிங்காக ஆலோவீரா என்ற பெயருடன் விற்பனைப்படுத்தப்படும் இந்த சோற்றுக்கற்றாழையினை முகப்பொலிவிற்காக பயன்படுத்திவருகின்றோம்.இன்னும் ஆலோவீரா ஜெல்,ஆலோவீரா மருந்து என பலவகைகளில் கிடைக்கிறது.சோற்றுக்கற்றாழையில் மேலும் கால்சியம், மெகனீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம்,சிங்க் போன்ற உடலுக்கு இன்றியையாத தாதுக்களும் கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரை நோய்க்கு கண் கண்ட மருந்தாகவும் சோற்றுக்கற்றாழை திகழ்கிறது. இதை ஜூஸாக தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.


மருந்துக்கு உதவும் பாகம்:

   பசுமையான சதைப்பற்று

கட்டுப்படும் நோய்கள்

மூலவியாதிகள்
வயிற்றுப்புண்
மேகநோய்கள்
தீப்பட்ட புண்
கண்நோய்கள்
தோல்பிணிகள்

வளர்க்கும் விதம்:-

சிறு செடிகளினை நட்டு வைத்தல்

நெல்லி:
நெல்லியின் இலை, பட்டை, காய்த பழம் துவர்ப்பியாகச் செயல்படும் பூ குளிர்ச்சியுண்டாக்கி மலத்தை இளக்கும். பழமும் சிறு நீரைப் பெருக்கி, மலக்காரியாகவும், சீதள காரியாகவும் செயல்படும்.நெல்லி காயகற்ப மூலிகையில் முக்கியமானது. இதன் பொருட்டே அன்று அதியமான் ஔவைக்கு கொடுத்து சரித்திரத்தில் சான்றாக நிற்கின்றார் இதன்சிறப்பை பின் வரும் சத்துக் களில் விவரம் தெளிவுறுத்துகிறது.மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60 வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.

மருந்துக்கு உதவும் பாகம்:

பழம்

கட்டுப்படும் நோய்கள்

நீரிழிவு நோய்
மேகநோய்
நோய் எதிப்புத்திறனை உடலுக்குத்தரும்

வளர்க்கும் விதம்:-

விதைகள்,ஒட்டு முறை

செம்பரத்தை:-

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது


மருந்துக்கு உதவும் பாகம்:

பூ,இலை

கட்டுப்படும் நோய்கள்

வெள்ளை நோய்கள்,
உடற்சூடு,
தலை முடி பிரச்சனைகள்

வளர்க்கும் விதம்:-

குச்சிகள்


No comments:

Post a Comment