Wednesday 7 August 2013

மரம் நடலாம் வாருங்கள்.....

மரம் நடுவோம் மழை பெறுவோம்

எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று.ஆனால் மரம் நடுகின்றோமா என்றால் இல்லை.

இன்றே மரம் நடுவோம்.அதற்கு சில எளிய வழிமுறைகள்...

விதைப்பண்ணைகளுக்கு சென்று மரமாக வளரும் விதைகளினை வாங்கி அதனை நாம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் வீசி செல்வோம்.குழி பறிக்கவோ அல்லது நடவோ மெனக்கெட வேண்டாம்.அதனை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.

புளியமர விதைகள்,வேப்ப விதைகள் எளிதாக கிடைக்கும்.அதனை எளிதாக சேகரிக்கலாம்.அப்படி சேகரிக்கப்பட்ட விதைகளினை நாம் அன்றாடம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே தூவிச்செல்லலாம்.அதன் வளர்ச்சியினை நாம் கண்முன்னே காணலாம்.

நமது பிறந்த நாளிற்கு சாக்லேட்,கேக் என செலவு செய்வதற்கு பதில் மரக்கன்றுகளினை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்து சாலை ஓரங்களில் நடசெய்யலாம்.நாமும் நடலாம்.ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு விதமான மரக்கன்றுகள் வழங்கலாம்.

பறவையினங்கள் பழங்களினை தின்று அப்படியே விட்டுச்செல்லும் கொட்டைகள் முளைக்கும் போது நம்மால் வீசி எறியக்கூடிய விதைகள் முளைக்காதா?

குழி வெட்டி விதை போட்டு மூடி தண்ணீர் விட்டுத்தான் மரம் வளர்க்கவேண்டும் என்பதில்லை.விதை போட்டாலே போதும்.தற்போது மழை பெய்து வருவதால் மற்ற விசயங்களினை இயற்கைசெய்து கொள்ளும்.

நம்கைகளில்தான் மரம் வளர்ப்பு இருக்கிறது.இன்றே ஆரம்பிப்போமா..

2 comments: