Tuesday 6 August 2013

மரம்...மழை....விளம்பரம்....

மரம்...மழை....விளம்பரம்....

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி.

பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அந்த கார்பன் டை ஆக்சைடினை அதாவது கரியமில வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி நமக்கு உதவுகிறது.இதனை அறிந்தோ அறியாமலோ சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு வளர்த்தார்கள்.ஆனால் இன்று நான்கு வழிப்பாதை ஆறுவழிப்பாதை என அவ்வாறு வளர்த்த மரங்களினை வெட்டி சாலைகளினை அகலப்படுத்துகின்றோம்.

நான்கு வழிப்பாதைகளில் செல்வோர் கவனித்து இருக்கலாம்.இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்த மரங்கள் இல்லாததினை.

இருப்பினும் ரோட்டின் நடுவே செவ்வரளி எனப்படும் செடி வகைகளினை நட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள்.ஏன் செவ்வரளி நடப்பட்டுள்ளது தெரியுமா? அது அதிகளவில் கரியமில வாயுவினை எடுத்துக்கொள்ளும்.அதனாலேதான் செவ்வரளி நடப்பட்டுள்ளது.


தற்போது சில இடங்களில் சில ரோட்டோரங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது.ஆனால் அதனை நாம் விளம்பரப்படுத்தும் பலகையாக,ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பினை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றோம்.இது எந்த அடிப்படையில் நியாயம்.விளம்பரம் செய்ய கட்டுப்பாடு ஏதும் வேண்டாமா? விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களினை என்ன செய்வது? சமூக பொறுப்புணர்வு வேண்டாமா?மரங்களினை காயப்படுத்துவது சரியா?எத்தனை பொத்தல்கள்?எத்தனை ஆணிகள்?
நல்லவேளை ரிப்ளெக்டர் மறைக்கப்படவில்லை

எத்தனை ஆணிகள் 

மரம் சிறியதானதால் இரண்டு மட்டுமே

ஆணி விற்பனைக்கு

வரிசையாக அனைத்து மரங்களிலும் 


ஒரே மரத்தில் பல்வேறு விளம்பரங்கள்

மரம் ஒன்று பயன் மூன்று
திருந்துவோமா? 



No comments:

Post a Comment