Wednesday 7 August 2013

எங்கள் வீட்டு வீட்டுத்தோட்டம்

    என்னுடைய முதல் பதிவில் வீட்டுத்தோட்டம் என்ற தலைப்பில் வீட்டில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட தோட்டம் குறித்து கருத்துரைத்து இருந்தேன்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் ஆனால் செயல்படுத்துவதில்தான் கடினம்.கருத்துரைத்த நான் செய்யாமல் இருக்கலாமா?அதான் எங்கள் வீட்டின் மீது தோட்டம் அமைத்தேன்.கீரைகள்,தக்காளி,வெண்டை,மிளகாய்,கேரட்,பீட்ரூட்,முள்ளங்கி,ஆகியன விதைத்தேன்.எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?நாள் தோறும் வளரும் விதங்களினை ரசித்தேன்.ஒவ்வொரு இலை விடும் போதும் சந்தோசத்தில் மனம் துள்ளியது.முதன் முறையாக GROW BAG  எனப்படும் பையில் அரைகீரை நட்டு அது வளர்ந்து அதனை அறுவடை செய்து சமைத்து உண்டேன்.எவ்வளவு இனிமை தெரியுமா?இன்று தண்டு கீரை அறுவடை செய்து சமைத்து உண்டோம்.மாசற்ற பயிர்.மட்டற்ற மகிழ்ச்சி.வெண்டை பூத்துள்ளது.ரசிக்கின்றேன்.,ருசிக்க தயராக உள்ளேன்.

பயன்படாத வாளியில் ரோஸ் செடி நட்டுள்ளேன்.பூக்க தயாராக உள்ளது.மேலும் சிறு சிறு பூச்செடிகள்,பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்துள்ளேன்.

GROW BAG  எனப்படும் செடி வளரும் பைகள் சேலத்திலிருந்து வாங்கினேன்.3 வருடத்திற்கும் மேல் உழைக்கும்.பயன்படுத்துதல் சுலபம்,பிளாஸ்டிக் தொட்டிகள்,மண்தொட்டிகள் போன்றவற்றிற்கு மாற்றாக இதனை பயன்படுத்தினேன்.மேலும் பயன்படாத தண்ணீர்கேன்களினை வெட்டி மண் நிரப்பி பூச்செடிகள் நட்டுள்ளேன்.

எங்கள் வீட்டு காய்கறித்தேவையினை சிறிது சிறிதாக இதன் மூலமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன்.
பைகளில் விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

பைகளில் கீரை விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

பைகளில் தண்டுக்கீரை விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றது

வெந்தயக்கீரை

காய்கறி செடி வகைகள்

அனைத்தும் ஒரே இடத்தில்

மிளகாய்,சீனி அவரை,பீட்ரூட்,பாகல்

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் பூச்செடி

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் பூச்செடி

பிளாஸ்டிக்பாட்டிலில் மணிபிளாண்ட்

பிளாஸ்டிக்பாட்டிலில் மணிபிளாண்ட்

உடைந்த பிளாஸ்டிக் டிரேவில் வெண்டை

உடைந்த பிளாஸ்டிக் டிரேவில் வெண்டை பூக்க துவங்கியுள்ளது

பூச்செடிகள்

பயன்படாத வாளியில் ரோஸ் செடி

முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட கீரை

முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட கீரை
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.


ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார் என்ற வள்ளுவரின் வாக்கின் படி செய்ய வேண்டும் என எண்ணினால் அதனை செய்ய இயலும்.


3 comments:

  1. Thanks For Your Comment.This will Boost My activity.

    ReplyDelete
  2. sir,
    Today i had seen your thootam.It is a beautiful job done by you. Thanks for your information.
    It creates more interest to do kitchen garden in our house. In this regard i need your help for "Grow bag"
    what is the price of a one bag and is it available in various sizes.Where is available in chennai. If possible can you give
    salem address.

    ReplyDelete