Tuesday 13 August 2013

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013-கறுப்புச்சட்டம்



         நன்றி: கிரீன் பீஸ் இந்தியா அமைப்பு

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 ஐ எதிர்த்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி (வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்த நாள்) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்ட  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாள் முழுதும் நடைபெற்ற இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 20 மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.பாராளுமன்றம் நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013ஐ திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்திய பருத்தியால் நெய்யப்பட்ட இந்திய தேசியகொடி இந்த ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது சிறப்பு.பேரணி முடிவில் இந்திய பருத்தியால் நெய்யப்பட்ட இந்திய தேசியக்கொடி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15இல் பட்டொளி வீசி பறக்க விட திரு நாராயணசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது இம்மாதிரியான கறுப்புச்சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.

காலம்காலமாக பயிரிட்டு மறு விதைப்பிற்கென விதைகளினை எடுத்துவைத்து பயன்படுத்திவந்த நம்மை, விதைகளினை மரபணு மாற்றப்பட்ட விதைகளினை மான்சாண்டோ போன்ற விதை உற்பத்தியாளர்களிடம் வாங்கும் வகையில் அவர்களினை பலப்படுத்தும் வகையில் விதை உற்பத்தியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வியாபார தந்திரம் தான் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013.

இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013 கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு  பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளது.சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக மாநில மொழிகளில் கருத்தாய்வு மேற்கொள்ளவும் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறவும் ஜூலை 10 கடைசி தேதி என இருந்தது ஆகஸ்ட் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 இல் டெல்லியில் இந்திய உயிரி தொழில் நுட்ப ஒழுங்காற்றமைப்புச்சட்டம் 2013க்கு எதிராக உள்ளோம் என்பதினை அரசுக்குத்தெரிவிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி முழக்கம் இட்டு உள்ளனர்.நாம் நேரிடையாக இந்த சுதந்திரபோரில் பங்கு கொள்ளமுடியவில்லை எனினும் இணையம் மூலமாகவாவது நம் எதிர்ப்பினை பதிவு செய்வோமே..நம் எதிர்ப்பு ஆட்சியாளர்களின் கண்களினை திறக்கட்டுமே.


எதிர்ப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள்

இந்த போராட்டத்தில் இணைய இங்கே சொடுக்குங்கள்

மேலும் விவரங்களுக்கு

  1. Thousands demand BRAI bill be withdrawn, India be GMO free, Deccan Chronicle, Aug 11, 2013.
    http://www.deccanchronicle.com/130811/news-current-affairs/article/thousands-demand-brai-bill-be-withdrawn-india-be-gmo-free
  2. Farmers demand hoisting of non-Bt cotton flag on Independence Day, TOI, Aug 8, 2013.
    http://articles.timesofindia.indiatimes.com/2013-08-08/delhi/41201028_1_cotton-production-brai-bill-kavitha-kuruganti
  3. Biotechnology Bill: deadline for public feedback extended, Down to Earth, July 10, 2013.
    http://www.downtoearth.org.in/content/biotechnology-bill-deadline-public-feedback-extended

No comments:

Post a Comment